»
நீ இன்றி ஓர் இரவு !!!
நீ இன்றி ஓர் இரவு !!!
Posted by prem
on 7:37 PM
in
|
0
comments
சிறைப்பட்டு போவதும் சில நேரங்களில்
சந்தோசம்தான் ....
புரிந்தது உன் பார்வை
தீண்டிய நேரத்திலெல்லாம் ..
உன் மன இருந்தாலும்
அதிலும் ஒரு கட்டற்ற சுதந்திரம்..
எப்படி இது சாத்தியம் ??
தெரிந்தால் எனக்கும் சொல்லிக்கொடு .
நேற்றிரவு ...
உன் வார்த்தைகள் தீண்டாத செவிகள்
இன்றும் ஏனோ ஊனமாய்..
என்றும் இல்லாத நிசப்தம்
அதிலும் ஓங்கி ஒலித்தபடி
வெகு நேரமாய் உன் நினைவுகள் ..
அனைத்தும் இருந்தும் ஏதோ ஒன்றை இழந்ததுபோல் ...
பொம்மையை தவறவிட்ட குழந்தைபோல்....
வேறெதுவும் தோன்றாது கணணியை
வெறித்து நோக்கியபடி நெடுநேரமாய் நான்...
படுக்கைக்கு சென்று பல மணித்துளிகள்
கடத்து போனாலும் கூட
தூக்கம் என்னவோ தூரமாய்....
கடிகார முள் அசையும் ஓசைகூட
நேற்றுமட்டும் நரகாசமாய்....
Tags:
About author
Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.
Friday, April 11.
You are here : Home »